தினம் ஒரு ஹதீஸ்-163
நெற்றியை தரையில் வைத்து மூக்கை வைக்காமல் ஸஜ்தா செய்வதோ, அல்லது முழங்கைகளை தரையில் படுமாறு ஸஜ்தா செய்வதோ, அல்லது இரு பாதங்களையும் தரையில் வைக்காமலோ, ஒரு பாதத்தை தரையில் வைத்து மற்றதை வைக்காமலோ ஸஜ்தா செய்வது கூடாது.
أَخْبَرَنَا عَمْرُو بْنُ مَنْصُورٍ النَّسَائِيُّ، قَالَ حَدَّثَنَا الْمُعَلَّى بْنُ أَسَدٍ، قَالَ حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ عَلَى الْجَبْهَةِ وَأَشَارَ بِيَدِهِ عَلَى الأَنْفِ وَالْيَدَيْنِ وَالرُّكْبَتَيْنِ وَأَطْرَافِ الْقَدَمَيْنِ
ﺳﻨﻦ ﺍﻟﻨﺴﺎﺋﻲ 1097
“நெற்றி”, (தமது கையால் தமது மூக்கை நோக்கி – நெற்றியுடன் மூக்கு உட்பட என்பதைப் போன்று சைகை செய்தார்கள்) “இரு (உள்ளங்)கைகள், இரு (முழங்)கால்கள், இரு பாதங்களின் நுனிகள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு (தொழுகையில்) ஸஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: நஸாயீ 1097
It was narrated from Ibn ‘Abbas (ra) that, The Prophet (sal) said: “I have been commanded to prostrate on seven bones: on the forehead (and he pointed with his hand- “on the nose), the hands, the knees and the ends of the feet.“
[Nasa'i 1097]