அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

ஒரே நாளில் 2500 நன்மைகள் பெற…


தினம் ஒரு ஹதீஸ்-366

حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏خَصْلَتَانِ أَوْ خَلَّتَانِ لاَ يُحَافِظُ عَلَيْهِمَا عَبْدٌ مُسْلِمٌ إِلاَّ دَخَلَ الْجَنَّةَ هُمَا يَسِيرٌ وَمَنْ يَعْمَلُ بِهِمَا قَلِيلٌ‏‎‏ ‏يُسَبِّحُ فِي دُبُرِ كُلِّ صَلاَةٍ عَشْرًا وَيَحْمَدُ عَشْرًا وَيُكَبِّرُ عَشْرًا فَذَلِكَ خَمْسُونَ وَمِائَةٌ بِاللِّسَانِ وَأَلْفٌ وَخَمْسُمِائَةٍ فِي الْمِيزَانِ‏‎‏ ‏وَيُكَبِّرُ أَرْبَعًا وَثَلاَثِينَ إِذَا أَخَذَ مَضْجَعَهُ وَيَحْمَدُ ثَلاَثًا وَثَلاَثِينَ وَيُسَبِّحُ ثَلاَثًا وَثَلاَثِينَ فَذَلِكَ مِائَةٌ بِاللِّسَانِ وَأَلْفٌ فِي الْمِيزَانِ‏‎‏ ‏فَلَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَعْقِدُهَا بِيَدِهِ‏‎‏ قَالُوا ‏يَا رَسُولَ اللَّهِ كَيْفَ هُمَا يَسِيرٌ وَمَنْ يَعْمَلُ بِهِمَا قَلِيلٌ‏‎‏ قَالَ ‏يَأْتِي أَحَدَكُمْ – يَعْنِي الشَّيْطَانَ -فِي مَنَامِهِ فَيُنَوِّمُهُ قَبْلَ أَنْ يَقُولَهُ وَيَأْتِيهِ فِي صَلاَتِهِ فَيُذَكِّرُهُ حَاجَةً قَبْلَ أَنْ يَقُولَهَا
ﺳﻨﻦ ﺃﺑﻲ ﺩﺍﻭﺩ 4406

இரண்டு நல்லறங்கள் உள்ளன. அவற்றை முறையாகக் கடைப்பிடிக்கும் முஸ்லிம் நிச்சயமாக சொர்க்கத்தில் நுழைவார். அவ்விரண்டும் மிக எளிதானது. எனினும் அதனைக் கடைப்பிடிப்பவர் மிகக் குறைந்த எண்ணிக்கையினரே. (அவ்விரண்டில் முதலாவது): ஒவ்வொரு (கடமையான) தொழுகைக்குப் பிறகும் பத்து முறை சுப்ஹானல்லாஹ் என்றும், பத்து முறை அல்ஹம்துலில்லாஹ் என்றும், பத்து முறை அல்லாஹு அக்பர் என்றும் கூற வேண்டும். இவ்வாறு (ஒரு நாளின் ஐவேளைத் தொழுகைக்கும் சேர்த்து, (5 x 30)) நூற்று ஐம்பது முறை கூறுவதானது மறுமைத் தராசில் ஆயிரத்தி ஐநூறு நன்மைகளைப் பெற்றுத் தருகின்றன. (அவற்றில் இரண்டாவது:) படுக்கையில் (இரவில்) தூங்கும் முன், முப்பத்தி நான்கு முறை அல்லாஹு அக்பர் என்றும், முப்பத்தி மூன்று முறை அல்ஹம்துலில்லாஹ் என்றும், முப்பத்தி மூன்று முறை சுப்ஹானல்லாஹ் என்றும் கூறவேண்டும். இவ்வாறு கூறும் (34+33+33) நூறு திக்ர்களானது மறுமைத் தராசில் ஆயிரம் நன்மைகளைப் பெற்றுத் தருகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும் நபி (ஸல்) அவர்கள் கை விரல்களால் (திக்ர் செய்து) எண்ணியதையும் நான் பார்த்தேன். (நபி (ஸல்) இவ்வாறு கூறியதைக் கேட்டதும், அவர்களிடம்) மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! இவ்விரண்டும் மிக எளிதாக இருந்தும் அதனைக் கடைபிடிப்பவர் ஏன் மிகக் குறைவாக உள்ளனர்?” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உங்களில் ஒருவர் உறங்கச் செல்லும் போது, இதனைக் கூறுவதற்கு முன்னராகவே ஷைத்தான் அவரை உறங்க வைத்து விடுகிறான். அதுபோல் அவர் தொழுது கொண்டிருக்கும் போதே அவரிடம் அவன் (ஷைத்தான்) வந்து இதனைக் கூறுவதற்கு முன்னரே வேலைகளை நினைவூட்டி (எழுந்திருக்கச் செய்து) விடுகிறான்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: அபூதாவூத் 4406

Narrated Abdullah ibn Amr (ra):
The Prophet (sal) said, There are two qualities or characteristics which will not be returned by any Muslim without his entering Paradise. While they are easy, those who act upon them are few.One should say: “Subhanallah” ten times after every prayer, “Alhamdulillah” ten times and “Allahu Akbar” ten times. That is a hundred and fifty on the tongue, but one thousand and five hundred on the scale. When he goes to bed, he should say: “Allahu Akbar” thirty-four times, “Alhamdulillah” thirty-three times, and “Subhanallah” thirty-three times, for that is a hundred on the tongue and a thousand on the scale. I saw the Messenger of Allah (sal) counting them on his hand. The people asked:O Messenger of Allah! How is it that while they are easy, those who act upon them are few? The Prophet (sal) replied: “Shaitan comes to one of you when he goes to bed and he makes him sleep, before he utters them, and he comes to him while he is engaged in prayer and calls a need to his mind before he utters them.
[Abudawud 4406]

தொடர்புடைய பிற பதிவுகள்: கடமையான தொழுகைக்குப் பின் ஓத வேண்டியவை1234567

Blogger Widget